Tuesday 10 January 2017

Golden Ratio - கோல்டன் ரேஷியோ

உங்களுக்கு golden ratio என்பதை பற்றி தெரியுமா? Fibonacci number...??        
இவை நம்மை சுற்றி இயற்கையில் ..இயற்கையாகவே அமைந்து உள்ள ஒரு அதிசய கணிதம்..
உங்களுக்கு "pi "என்பதை பற்றி தெரிந்திருக்கும்..அதாவது.. அந்த 3.14....
ஆனால் "phi" பற்றி தெரியுமா?
இது கிரேக்க எழுத்துக்களில் 21 வது எழுத்து. கணிதத்தில் இதுதான் " கோல்டன் ரேஷியோ" காண சிம்பல்.
ஒரு பெரிய கோட்டை இரண்டாக பிரிக்கிறீர்கள்.. சரிபாதியாக அல்ல ஒன்னு பெரிது ஒன்னு சின்னதாக... இப்போது அந்த பெரிய கோட்டை சின்ன கோட்டை கொண்டு வகுத்தால் வரும் எண் இருக்கிறதே.. அது அந்த கோட்டின் மொத்த நீளத்தை பெரிய கோடை கொண்டு வகுத்தால் வரும் எண்ணுக்கு சமமாக இருப்பதை ...அந்த விகிதாசாரதைதான் Golden ratio என்கிறார்கள்.
கோல்டன் ரேஸ்யோவை குறிக்க phi யை பயன் படுத்த காரணம்.. முன்பு சொன்ன அந்த விகிதாச்சாரம் phi இன் மதிப்பாகிய 1.6 க்கு நெருக்கமாக இருப்பது தான்.
இந்த phi ஆர்வலர்கள் ஆய்வாளர்கள்
அந்த காலத்தில் கட்டபட்ட.. மர்மம் நிறைந்த கட்டிடமான பிரமிட்.. இந்த கோல்டன் ரேஷியோ படி கட்ட பட்டுள்ளதை கவனித்தார்கள். க்ரேட் பிரமிடு கிசா இருக்கிறதே அதன் ஓவொரு பக்கத்திலும் அதன் நீளம் 786 அடி. மேலும் அதன் உயரம் 481 அடி.. அதாவது இவை இரண்டுக்கும் உள்ள விகிதம் 1.57 .அதாவது phi யின் மதிப்புக்கு மிக நெருக்கமாய்.
இப்படி பிரமிடுகளில் மட்டும் அல்லாமல் பழைய கட்டிடங்கள் பல வற்றில் இந்த கோல்டன் ரேஸ்யோ பயன்படுத்த பட்டிருப்பதை கவனிதார்கள்.
பிபோனாச்சி நம்பர் என்பதை நீங்கள் கேள்வி பட்டிருப்பீர்கள்.
1200 களில் Leonardo Bonacci
என்ற கனிதவியலாளரால் இது கண்டுபிடிக்க பட்டது.
அதாவது 0,1,1,2,3,5,8,13,21,34, இப்படி எழுதுவது தான் பிபோநாச்சி நம்பர்.. இதில் உள்ள சிறப்பு என்ன என்று கவனித்தால் எந்த ஒரு நம்பரும் அதற்கு முந்தய இரு நம்பர்களின் கூட்டு தொகையாக இருக்கும்.
இந்த எண்களின் மாறும் விகிதம் தான் கோல்டன் ரேஷியோ.... இது phi மதிப்பிற்கு நெருக்கமாக உள்ளது.. அதிலும் எண்கள் பெரிதாக பெரிதாக phi மதிப்பாகிய 1.618 ஐ அதிகம் நெருங்குகிறது.
உதாரணமாக 3 கும்5 கும் இடையிலான விகிதம் 1.666 ஆனால் 13 க்கும் 21 க்கும் இடையிலான விகிதம் 1.625... இன்னும் பெரிய என்னானால்... 144 கும் 233 கும் பார்த்தால் 1.618 இப்படி....
லியர்னடோ டாவின்ஸி தான் வரைந்த ஓவியங்களில் இந்த கோல்டன் ரேஷியோ சமாச்சாரத்தை பயன்படுத்தி இருக்கிறார்.
அவரது லாஸ்ட் சப்பர் ஓவியத்தில் இயேசு தனது சீடர்களுடன் உணவு உண்ணும் காட்சியில் உள்ள மேஜை மற்றும் சில பொருட்களில் இந்த விகிதாச்சாரத்தை பயன்படுத்தி வரையப்பட்டுள்ளது. அவரது மோனோலிசா ஓவியம் கூட இதை பயன் படுத்தி வரைய பட்டது தான்.

இயற்கை தனது படைப்பில் இதை தொடர்ந்து பயன்படுத்தி வருகிறது.
ஒரு சூரிய காந்தி பூவில் மையத்தில் சுருள் சுருளாக இருக்கிறதே அந்த டிசைன் அதை உற்று கவனித்தால் கோல்டன் ரேஷ்யோ படி அமைந்துள்ளதை கவனிக்கலாம் .. ஒரு மரத்தில் கிளைகள் அதில் இலைகள் எப்படி எந்த எண்ணிக்கையில் படி படியாக வளர்கிறது என்று பார்த்தால் இந்த விகிதம் தான்.
தாவரத்தில் மட்டும் அல்ல ஒரு நத்தையின் ஓடு இந்த விகித அடிப்படையில் தான் சுருளாக இருக்கிறது.. விலங்குகளின் உடலமைப்பை கவனித்தால் இந்த விகிதம் இருக்கிறது.
அவ்வளவு ஏன் மனிதனின் கைகள் மற்றும் விரல்கள் இந்த விகிதத்தில் தான் அமைந்துள்ளது என்றால் பார்த்து கொள்ளலாம்.
இப்போது இனொன்று சொல்கிறேன் இயற்கை உயிரினங்களில் மட்டும் இல்லை .. பல இயற்கை ஆற்றல்களில் ...படைப்புகளில் இதை வெளிப்படுத்துகிறது.. என்பது இன்னும் ஆச்சரியமானது.
சூறாவளி ஏற்படும் போது அதன் சுழல் கவனித்தால் இந்த விகிதத்தை பார்க்கலாம்..
கடல் அலையை கவனித்தால் இந்த கோல்டன் ரேஷியோ சமாச்சாரத்தை பார்க்கலாம்.
இன்னும் எங்கெங்கே இயற்கை இதை பயன் படுத்துகிறது என்பதை ஆராய மனிதன் சிரிதினும் சிறிதான DNA சுருளை ஆராய்ந்து பார்க்க அந்த சுருளே இந்த விகிதத்தில் தான் அமைந்துள்ளது என்பதை பார்த்து அதிசையித்தான்.. பிறகு பெரிதினும் பெரிதான கேலக்சிகளை அதன் சுருள் அமைப்பை ஆராய்ந்த மனிதன் இந்த பிரபஞ்சமே அந்த கோல்டன் ரேஷியோ வை பயன்படுத்தி அமைந்துள்ளதை கண்டு மேலும் அதிசயித்து போனான்..
இந்த பிரபஞ்சம் அறிவியலால் ஆனது என்று எப்போதும் சொல்லி வந்துள்ளோம்..ஆனால் அது நாணயத்தின் ஒரு பக்கம் தான் அதன் அடுத்த பக்கத்தில் பிரபஞ்சம் முழுக்க.. முழுக்க கனிததால் ஆனது 

Monday 26 September 2016

Titanic பயணிகள்

ஏப்ரல் 15 1912 அதிகாலை வட அடலான்டிக் கடலில் நடந்த டைட்டானிக் என்ற சரித்திர சோகத்தை பற்றி எல்லோருக்கும் தெரியும்...
அதில் பயணம் செய்த 2224 பயணிகளில் உயிர் தப்பியவர்கள் 705 பேர்.
1997 இல் வெளிவந்து சக்கை போடு போட்ட டைட்டானிக் திரை படம் மூலம் இந்த தகவல்கள் எல்லாம் உலகில் பல பேருக்கு தெரிய வந்தது...
ஆனால்..
அந்த உயிர் தப்பிய பயணிகளில் பல பேருக்கு 
அதன் பின் நிகழ்ந்ததை பற்றி நம்மில் பல பேருக்கு தெரியாது. குறிப்பாக டைட்டானிக் இல் உயிர் தப்பிய பல பேர் அடுக்கடுக்காக தற்கொலை செய்து கொண்டார்கள்

டைட்டானிக் மூழ்கி 6 மாதம் கழித்து.

ஏனே ராபின்சன் என்ற பெண்மணி ...நீராவி கப்பலில் மேல் இருந்து குதித்து தற்கொலை செய்து கொண்டார்.. அவர் டைட்டானிக் இல் ஸ்டீவாய்டிங் வேலை செய்தவர்..
வாஷிங்டன் டாட்ஜ் என்பவர் 1919 இல் தன்னை தானே சுட்டு கொண்டு தன் உயிரை மாய்த்து கொண்டார்.
1927 இல் ஹென்றி வில்லியம் ஒரு மருத்துவமனையின் 7 வது மாடியில் இருந்து குதித்து தற்கொலை செய்து கொண்டார்
இவர் கொஞ்சம் குண்டு ஆக்ருதி கொண்டவர் . டைட்டானிக் இல் தப்பும் போராட்டத்தில் லைப் போட் இல் குதித்த போது ஒரு பெண்ணின் மேல் குதித்து அந்த பெண்ணின் இடுப்பு எலும்பை உடைத்திருந்தார்.
1927 ஜான் நிகின்சன் ..ஒரு தங்கம் தேடும் பேர்விழி... தனக்கு தானே தீ வைத்து கொண்டு இறந்து போனார்.
1945 இல் ஜான் தேயர்... டைட்டானிக் இல் தன் தந்தையை பறிகொடுத்து தாய் உடன் உயிர் தப்பியவர்.. தனது கை நரம்பு மற்றும் கழுத்தை அறுத்து கொண்டு இறந்து போனார்.
1951 ஜான் மார்கன் டேவிட் அதீத போதை வஸ்து வால் இறந்து போனார்..
பில்லிஸ் ஜென் குவிக்கி டைட்டானிக் இல் தப்பிய குழந்தை ..அவர் வளர்ந்து 45 வயதில் தன்னை தானே சுட்டு கொண்டார்...
பிரெட்ரிக் பிலீட்... ஐஸ் பாறை டைட்டானிக் ஐ நெருங்குவதை லைவ் இல் பார்த்து கத்தி கூச்சல் இட்டவர்..
1964 இல் தூக்கில் தொங்கி உயிரை விட்டார்..
இப்படி டைட்டானிக் சர்வைவர் பல பேர் தற்கொலை செய்து கொள்வதை ஆராய்ந்த போது அவர்களுக்கு தனிப்பட்ட வெவேறு காரணங்கள் இருப்பது தெரிந்தது..உதாரணமாக வாஷிங்டன் டாட்ஜ் ஊழல் வழக்கில் சிக்கியவர்.. ஜான் நிக்கின்சன் தங்கம் கிடைக்காத விரக்தியில் இறந்தவர்.
இப்படி இருந்தாலும் ...இப்படி இறந்தாலும்....ஆய்வாளர்கள் டைட்டானிக் தற்கொலை களுக்கு காரணம் அவர்களுக்குள் மறைந்திருந்த டைட்டானிக் டிஸாஸ்டர் என்ற பூதம் தான் அவர்களை தற்கொலைகு தூண்டியது என்றார்கள்.. அதாவது அன்று நடந்து கசப்பான அனுபவம் அவர்கள் மனதில் அதீத பாதிப்பை ஏற்படுத்தி இருந்தது என்றார்கள்..
ஆய்வாளர்கள் இப்படி சொன்னாலும் மக்கள் வேறு மாதிரி பேசி கொண்டார்கள் அதாவது தப்பி பிழைத்தவர்களை டைட்டானிக் சாபம் பின் தொடர்வதாக நம்பினார்கள்..
அந்த சாபத்திற்கு ஆளானவர்களில் ஒருவர் தான் masaboomi hosono டைட்டானிக் இல் உயிர் தப்பிய ஒரே ஜப்பானியர்..

அங்கே இறந்தவர் மற்றும் தப்பி தற்கொலை செய்தவர் இவர்கள் இரண்டையும் விட பரிதாபமானவர் ஹோசோனா...
ரஷ்யாவின் ரயில்வே சிஸ்டமை ஆராய ஜப்பான் ட்ரான்ஸ்பர்டேஷன் மினிஸ்டரி யால் அனுப்ப பட்டவர் தான் மாசாபூமி ஒசானோ..
சம்பவம் நடந்து 30 நிமிடம் கழித்து 2 ஆம் வகுப்பு பயனியால் எழுப்ப பட்டார் இவர் ஜப்பானியர் என்பதால் இவருக்கு 3 வது வகுப்பு தான் ஒதுக்க பட்டிருந்தது..
மிகுந்த சிரமத்திற்கு பின் தான் இவரால் லைப் போட்டில் ஏறி உயிர் தப்ப முடிந்தது... காப்பாற்ற பட்டு அமெரிக்கா சென்று பின் தன் தாயகம் திரும்பினார் .
ஆனால் அவர் தாயக பயணம் அவருக்கு இனிமையாக அமையவில்லை...
இவரை பார்க்கும் பொது ஜனம் எல்லாம் அவரை தூற்றி கேவல படுத்தினார்கள்... இத்தனை பேர் இறந்து இருக்க நீ மட்டும் உயிர் தப்பி இருக்க கூடாது என்றார்கள்.. அவர்களுடன் சேர்ந்து நீயும் இறந்து இருக்க வேண்டும் அதுதான் நியாயம் என்றார்கள்..
அப்படி பட்ட உணர்ச்சி அந்த நாடு பூராவும் அவர் மேல் காட்டியது...
அந்த நாடு பூராவும் அவரை சமூக துரோகி என முத்திரை குத்தியது..
நாளேடுகள் அவரை கேவலமாக சித்தரித்தன...
நாள்தோறும் பல பேர் அவரை தற்கொலை செய்ய வற்புறுத்தி நாலெடுகளுக்கு கடிதம் எழுதினார்கள்..
பாட புத்தகத்தில் அங்கத்தி புரபசர்கள் ஆலோசனை படி அவரை நாட்டின் களங்கதிர்கான் அடையாளம் என சித்தரித்தார்கள்..
அவருடைய வேலையை அவரது அரசாங்கம் பிடுங்கி கொண்டது பிறகு நீண்ட இடைவேளைக்கு பின் அவரை வாடகைக்கு அமர்த்தி சாகும் வரை இங்கேதான் வேலை செய்ய வேண்டும் என பணித்தது.. இம்முறை அவரது பழைய வேலை அவருக்கு திருப்பி தரப்பட வில்லை
நீ சீக்கிரம் செத்து போ என்கிற போன் கால்கள் அவருக்கு வந்த வண்ணம் இருந்தது...
இத்தனையும் பொறுத்து கொண்டு மஸுபூமி ஓசொனோ ஒரு முறைகூட தற்கொலை செய்து கொள்ள வில்லை என்றாலும் தான் டைட்டானிக் இல் செத்திருக்கலாமே என்று நினைத்து ஏங்காத நாள் இல்லை.
அவர் தனது டைட்டானிக் அனுபவத்தை யாரிடமும் வாய் திறந்து பகிர்ந்து கொள்ளவில்லை அவரிடம் பரிதாப பட்டு அதை கேட்க ஆள் யாரும் இல்லை..
தான் உயிர் தப்பியதை தவிர தான் செய்த தவறென்ன என்பது புரியாமல்
1939 வரை வாழ்ந்து இறந்து போனார்.
அவர் மரணத்திற்கு பின்னும் அவர் குடும்பத்தை நாட்டுக்கே களங்கமான குடும்பம் என்ற முத்திரை சூழ்ந்தது..
அவர் டைட்டானிக் இல் தனது மனைவிக்கு எழுதிய கடிதம் ஒன்று இருந்தது .. டைட்டானிக் இல் காப்பாற்ற பட்ட ஒரே பொருள் அதுதான் என்ற உண்மை.....1997 இல் ஜேம்ஸ் கேமரூன் வந்து டைட்டானிக் படம் எடுக்கும் வரை
உலகத்துக்கு தெரியாமல் இருந்தது..
அந்த படத்தை பார்த்த பின் தான் ஜப்பான் மக்கள் அந்த பரிதாபத்துக்குரிய ஜீவன் மீது கொஞ்சம் கருணையோடு நினைத்து பார்க்கவே தொடங்கினார்கள்..
டைட்டானிக் இல் பயணித்தவர்கள் அனைவரும் உண்மையில் சாபம் துரத்திய பயணிகள் தானா அல்லது விதிஎனும் விளையாட்டின் கோர பிடியில் சிக்கி கொண்டவர்களா என்பது கேள்விக்குறி ?????....

Thursday 5 May 2016

சுஜாதா ரங்கராஜன் - ’மை தீராதா ஓர் தூரிகை’....


நீங்கள் ரங்கராஜன் இல்லை...
எழுத்து உலகத்துகே ரங்க"ராஜ்ஜியம்"

சில வருடங்களுக்கு முன்...எதை படிப்பது, எவரைப் படிப்பது என்று எந்த புரிதலும் இல்லாமல் சகட்டு மேனிக்கு அனைவரையும் படித்து கொண்டிருந்த காலம்....சுஜாதாவை செவி வழியாக அறிமுக படுத்திய என் மாமா சீத்தாராமனின் சிபாரிசு ‘ஸ்ரீரங்கத்து தேவதைகள்’...ஒரு நாள் மதிய உணவிற்கு பின் பலர் குறட்டையோடும் சிலர் அரட்டையோடும் மசமசத்துத் திரியும் மதிய வேளை..படிப்பதற்கு ஒன்றும் இல்லாமல் ஏங்கும் பொது, செப்பனிடப்பட்ட அட்டையோடு 
ஒரு புத்தகத்தின் ஹீரோ எண்ட்ரி!!! புத்தகத்தின் பெயர் சாஷாத் 

"ஸ்ரீரங்கத்து தேவதைகள்"
ஹீரோ பெயர்"சுஜாதா" . 


படிக்க எளிமையாக இருக்கும் புத்தகங்கள் படிப்பது அப்போதைய வழக்கம் ,ஸ்ரீரங்கத்து தேவதைகள் கொஞ்சம் 
ஸ்பெஷல் ...
கும்பகோணம் தாண்டாத எனக்கு.....ஸ்ரீரங்கத்தையே கண் முன் கொண்டுவந்தவர், சுஜாதா.

முதல்வன், இந்தியன் போன்ற படங்களிள் அவரது படைப்புகளின் வசனங்களை கண்டு,.....ச்ச...மனுசன் என்னமா எழுதிற்கான்..என்று எண்ணிய நேரங்கலும் உண்டு.
இந்தியன் படத்தில் ”மத்த நாட்லலாம் கடமையை மீறதாண்ட லஞ்சம், இங்க மட்டும் தான் கடமையை செய்றத்துகே லஞ்சம்” என்ற இந்தியாவின் அல்காரிதத்தை இரண்டு வரியில் போட்டு உடைத்தவர்..

முதல்வனிலும்....ரகுவரனுகும் அர்ஜுனுகும் இடையே ஒடும் 15 நிமிடம் நேர்கானல்.....



”ரகுவரன்: எதிர் கட்சிக்கிட்ட எவ்வளவு பணம் வாங்குந.
அர்ஜுன்: நீங்க எதிர்க்கட்சியா இருந்தா எவ்வுலொ குடுத்துருப்பீங்க” 

என்று..ரங்கராஜ் பாண்டே கூட தோல்வியை தழுவும் இடம் அது....


”ரகுவரன்: ஒரு நாள்,.......ஒரு நா........ள்,....நீ CM ஆ இருந்துபார் அப்போ தெரியும்....


அர்ஜுன்: (5 sec silence) - சரி , இது சாத்தியம் நா......நான் CM ஆவுரென்........ ”. 


ஒரு நொடி , ஒரே ஒரு பதில்.....தேர்தல் இல்லாமல், தீர்ப்பு இல்லாமல், ஆட்சியை கலைக்காமல் ....முதலமைச்சரை நிராயுதபானியாக்கியதும், செய்தியாளனை முதலமைச்சராக்கி அழகு பார்த்ததும்.....அவரது எழுத்துக்கு மட்டுமே உள்ள தனித்துவம்....
விற்பனை வரி கட்ட உத்தரவு போடும்...அர்ஜுனை டிவி வழியாக பார்த்து..ஒரு நாளைக்கு விற்பனை வரி எவ்வளோயா வருது என்ற ரகுவரனின் கேள்விக்கு...."அய்யா கட்சிக்குங்களா இல்ல நாட்டுக்குங்களா” என்ற அமைச்சரின் மருமுனை கேள்வி தான் சுஜாதா கொளுத்தி போடும் நகைச்சுவை பட்டாசு.........




Technologyயிலும் சுஜாதாவின் தூரிகை தொடாத இடம் இல்லை.....இன்னும் இரணூரு வருசம் தான் அப்பரம் london தண்ணிக்குள்ள போய்டும்.. என்ற காக்கை சித்தர் getup போட்ட நடிகர் விவேக்கின் அனுமானம் அது

....21st centuary ஃபுல்லா விண்டோஸ் ஓஸ் தான் எல்லா பெர்சனல் கம்பூட்டரையும் கைகுள்ள போட்டுக்கும் என்பதை 19ஆம் நூற்றாண்டுகளிளே கணித்து சொன்னவர்...

விண்டோஸ் ப்ராடெக்ட தான் உலகமே உபயொகிக்கனும் அதுக்குதான் MAC OSக்கு மட்டும் வித்த MS officeஅ அவனோட ஓஸ் கும் போற்றுக்கான்
நாளைய அலுவலகங்களில் எல்லா வேலைகள் அதனுள் சென்று விடும்......windowsக்கு மாற்று வழி இல்லாமல்.... windowsஅய் கைவிடமுடியாமல் திணறுவோம்....அதுக்கு தான் billgates ஆசை படுறான்....என்று இன்றய நிலையை nostradamusயே விஞ்சிய பல வியூகங்களின் மூலம் 20 வருடத்திற்கு முன்பே சொன்னவர்.





அவரின் புத்தகங்களிள் மூழ்கும் ஒவ்வொரு வாசகனும்.......மூழ்கி எழும் பொழுது ப்றம்மித்து போகிறான்....
”A creator should educate his viewers"என்பதை அவரின் எழுத்துகள் வாயிலாக பலருக்கு உணர்த்தியவர்..
பள்ளியிலும் கல்லூரிகளிலும் ஏறாத big-bang theory, auteur theory, Kimberley process எல்லாம் அவரின் புத்தகங்களின் மூலம் புரியத் தொடங்கின.சத்தியமாக அவர் இல்லையென்றால் "one sharp stop"," cognitive intellectual perfection","bullet points". போன்றவை எல்லாம் நாம் அறிய வாய்ப்பே இல்லை!!!






நேற்று சுஜாதா அவர்கள் பிறந்தநாள் ...அவரை மறக்க விருப்பம் இல்லை .....
அவர் பெயரை எப்பொழுது எழுதினாலும் பின்பு 2 அல்லது 3 ஆச்சரியக்குறிகள் வருவதை தவிர்க்க முடியவில்லை .உண்மையிலேயே சுஜாதா!!! ஒர் ஆச்சரியக்குறி தான் .

இன்று அவர் இல்லையென்றாலும் அவர் எழுத்துகளின் பிரதிகள் அவரின் பிரதிநிதியாய்!!!


‪#‎ஜோர்பாதரணி_நாட்குறிப்பு‬

அலெக்ஸாண்டரை கலங்க வைத்த மன்னன் புருசோத்தமர்!!!



கிமு 320ம் ஆண்டு அலெக்ஸாண்டரின் நாடு பிடிக்கும் ஆசை ஓங்கியெரியும் தீயாகக் கொழுந்துவிட்டு எரிந்தது. அவருடைய தந்தை பிலிப் காலமுதல் பல் நாடுகள் மீதான படை எடுப்புகள் அந்த நாடுகளை ஆக்கிரமித்து அழகிய பெண்கள், அந்நாடுகளின் சொத்துகளை தமது நாட்டுக்கு எடுத்து சென்று சுகமாக வாழுதல் என்னும் கொள்கையில் குமரி கன்னடம் என்று சொல்லப்பட்ட இன்றைய இந்தியாவில் இருந்து செல்வங்களை அள்ளி வரக் கனவு கண்டார் பிலிப். ஆனால், அது நிறைவேறவில்லை. அவருடைய கனவை மகன் சுவீகரித்துக் கொண்டிருந்தான் . ஆசைக்கும், கனவுக்கும் ஏது எல்லை என்பது போல மண் ஆசையும் பொன் ஆசையும் பெண் ஆசையும் இவர்களையும் விட்டு வைக்கவில்லை .

அலெக்ஸாண்டர் இந்தியாவை வெற்றி கொள்ள விரும்பினான். கிழக்கின் எல்லை என்று இந்தியாவின் வரைபடத்தைக் கொண்டு வரைசெய்து இந்தியாவை அதன் புவியியல் நிலைகளை ஆராய்ந்தான். கம்பீரமான இமயமலைத் தொடர் பாய்ந்து ஓடும் பல் நதிகள் அடர்ந்த காடுகள் அந்த நாட்டின் காப்பரணாக இருப்பதைக் கண்டான். இயற்கையே அமைத்திருந்த வானுயர மதில் சுவர்! போல இமையமலை தொடர் , அதைக் கடந்தால் தான் இந்திய மண்ணில் காலடி வைக்க முடியும். எங்கே,எப்படிக் கடப்பது.  அந்த மலையரணில் இரண்டு குறுகிய பாதைகள் தென்பட்டன. அவை கைபர் மற்றும் போலன் கணவாய்கள். அவைதான் இலகுவான வழி .

சோழர்கள் 2 லட்சம் காலால் படையையும் 20 ஆயிரம் குதிரை படைகளையும் நான்கு குதிரை பூட்டிய தேர்படை 2000 இதற்கெல்லாம் மேலாக வேல் ஏறிய கூடிய யானை படை 3000 இருந்தது . சோழர்கள் தமது யானை படைகளை மிக இரகசியமாக் வைத்து இருந்தார்கள் அதனை அலெக்ஸ்சாண்டர் முழுமையாக் அறிந்து இருக்கவில்லை . சிறிய அளவில் 500 யானைகள் தான் இருக்கும் என்ற கணிப்பே அலேச்சண்டரிடம் இருந்த்தது.
இந்தியாவை நெருங்கி காபூலில் முகாமிட்டிருந்த அலெக்ஸாண்டருடைய படை இந்து குஷ்மலைத் தொடரைக் கடந்தது. தற்போது பாகிஸ்தான் என்று அழைக்கப்படும் நிலப்பரப்பை அவர்கள் முதலில் கைப்பற்றினர். அப்போது அப்பகுதியில் இருந்து சோழர் படை தந்திரோபாய பின் வங்களை செய்து இந்து நதியின் தென்கிழக்கா ஒரு இடத்தில் தமது படைகள் குவிந்து இருப்பது போல பாவனை செய்து இரவு வேளைகளில் மிக பலமான யானை அணிகளை வடக்காக நகர்த்தி இருந்தார்கள் . அலெக்ஸ்சண்டருக்கு தென் கிழக்கில் மட்டுமே சோழ படை மிக வலுவாக உள்ளது போன்ற ஒரு தோற்றம் கண்பிக்க பட்டது.

மாசிடோனியர்களை கொண்ட தனது படையை பழைய படை என்றும், பெர்ஸிய இளைஞர்கள் கொண்ட படைப் பிரிவை பின்தோன்றல்கள் என்றும் அலெக்ஸாண்டர் அழைத்தார்.பின்தோன்றல்களிடம் வலிமை இருந்தும், போர்ப் பயற்சி இல்லை. அவர்களில் பலருக்கு இந்தியாவில் கிடைக்கக் கூடிய பெருஞ்செல்வம் அழகிய பெண்கள் பற்றி ஆசை காட்டப்பட்டிருந்தது. மற்றவர்கள் கட்டாயப்படுத்தியதன் பேரில் படையில் சேர்ந்தவர்கள். பயிற்சி இல்லாமல் அவர்களை பயன்படுத்த முடியாது. எனவே, காபூலில் முகாமிட்டிருந்த காலகட்டத்தில் அவர்களுக்கு போர் பயிற்சியளித்தார் அலெக்ஸாண்டர்.
.
அலெக்ஸாண்டர் தன்னுடைய படையை இரண்டு பிரிவுகளாகப் பிரித்தார். ஒரு பிரிவைத் தனது நன்பன் ஹெபாஸ்டியன் தலைமையின் கீழ் அனுப்பினார். அந்தப் படை கைபர் கணவாய் வழியாக, சிந்து நதிப் தென் பிராந்தியம் பிரதேசத்தை நோக்கிச் சென்றது. மற்றொரு பிரிவுக்கு அலெக்ஸாண்டரே தலைமை தாங்கினார். அந்தப் படை ஸ்வாத் பள்ளத்தாக்கில் வடக்கு பக்கமாக இருந்த மலைச் சாரல் வழியாக உல் நுழைந்தது மலை சாதியினரை எதிர் கொண்டது.மலைச் சாதியினர் பலசாலிகள், முரட்டுத் தன மான தாக்குதல்களை செய்தார்கள் அவர்களுடன் புருசோத்தமரின் மைத்துனர் குலகோட்டன் தலிமையில் அங்குதான் சோழரின் குதிரைபடைகளும் நின்றன . மிகவும் பயற்சி பெற்ற மலைச்சாதி இளைஞசர்கள் தாய்மண் காக்க சோழன் படையில் இணைந்து இருந்தார்கள் . குளக்கோட்டன் படையின் ஒரு தளபதியாக மாகதன் என்னும் தளபதி அலெக்ஸ்சன்டரின் படைகளை ஓரளவு உல் நுழையவிட்டு இடையில் தாக்கினார். அத்தாக்குதலே முதல் முறையாக அலேச்சண்டரை மிக பெரிய தோல்விக்குள் தள்ளியது .இதுவராய் தாம் கண்டிராத தாக்குதல்கள் ஒவ்வொரு நாளும் அலெக்ஸ்சண்டருக்கு வியப்பாக் இருந்தது.இதுவரைக்கும் யானைகள் ஏதும் அவன் கண்ணில் படவில்லை. அலெக்ஸ்சந்தர் மிக பயிற்றுரவித்த நாய்களை பயன் படுத்தினான் . அக்காடுகளில் நாய்களே அவர்களுக்கு வழி காட்டும் வீரராக இருந்தன .

இந்தியாவின் வளமான காடுகள் மலைகள் நதிகள் அலேச்சண்டரை கவர்ந்தது. இந்தியாவை வென்று விட வேண்டும் என்று எண்ணினான் . இந்தியாவை வளமான நாடு என்பதையும், அலெக்ஸாண்டர் முன்பே கேள்வி பட்டிருந்தான் . ஆனால், அங்குள்ள பல மன்னர்கள் தங்களுக்குள் ஒற்றுமையாக இல்லை. அந்தப் பெரிய நிலப்பரப்பு பல சிறு துண்டுகளாக சிதறிக் கிடக்கிறது என்பதை இந்தியாவுக்கு வந்ததும் தெரிந்து கொண்டார். தன்னுடைய நோக்கம் எளிதில் நிறைவேற நிலைமை சாதகமாக இருப்பது அவருக்குப் புரிந்தது. அதனால் அலெக்ஸாண்டர் சில மன்னர்களை இரகசியமாக சந்திக்க தனது ஒற்றர்களை அனுப்பி வைத்தான் . போராடி வெல்வதில் சிரமனகள் நிகழும் நிலை தோன்றியது . தென் கிழக்கு படையுடன் இணையும் நாள் தாமதம் ஆகியது. தான் வரும் வழி எல்லாம் தன்னை எதிர்த்த சிற்றரசர்களைப் புறங்கையால் தள்ளிக் கொண்டு முன்னேறினான் அலெக்ஸாண்டர். பாகிச்தனம் வரை அதே நிலைதான் ஆனால் இப்போது மிக பெரிய சவாலை சோழர் தலைமயில் இருக்கும் இந்திய படைகளை கொடுக்க தொடங்கியது .

அடுத்து, தட்சசீலம் என்ற குறுநில அரசுக்குள் அலெக்ஸாண்டரின் படை நுழையும் திட்டத்தில் இறங்கியது அது சிந்து நதிக்கும், ஜீலம் நதிக்கும் இடையே பரவியிருந்த நிலப்பரப்பு. தட்சசீலத்தை, “அம்பி’ என்கிற மன்னன் ஆண்டுவந்தார். அவன் மன்னன் புருசோத்தமன் மீது காழ்ப்புணர்வு கொண்டு இருந்தான் . அலெக்ஸ்சாண்டர் எப்படியாவது புர்சொத்தனை அடிமைகொள்வான் . அலேச்சனடருக்கு உதவினால் தான் வரும் களத்தில் பெரும் மன்னனாக ஆகிவிடலாம என்று கனவு கண்டான் . அவனது எல்லை தாண்டினால் புருசோத்தமன் படைகள் தயாராக இருந்தன . அங்குதான் 2000 யானைகள் நிலை எடுத்து மிக துல்லியமாக ஒரு அதிரடி தாக்குதலுக்கு தயாராக் இருந்தன . அந்த யானை படைகளுக்கு தலைமை ஏற்று கரிகால் சோழன் பேரன் மனுநீதி சோழன் தயாராக இருந்தார் .

அதற்கடுத்ததாக ஜீலம் நதிக்கும், செனாப் நதிக்கும் இடையிலான பகுதியை மன்னர் போரஸ் என்ற புருசோத்தமன் ஆட்சி செய்துவந்தார். சற்று தள்ளி ரவி, பியாஸ் நதிகளின் பக்கம் மாலி என்கிற மாளவர் களின் தேசம் இருந்தது. காமரூபம், வங்கம், மகதம் என்று வட இந்தியாவிலேயே பல ராஜ்யங்கள் சோழ மண்டல கொடியின் குடைக்குள் ஆண்டு வந்தன .
அன்று தமிழர் படையே மிகவும் உக்கிரமான போரை தொடுத்தது . தட்சசீல மன்னர் அம்பிக்கும், அரசர் புருசோத்தமர பிடிக்காது அவரது வீரமும், நிர்வாகத் திறமையும் அவர்மீது பொறாமையை ஏற்படுத்தியிருந்தன.அலெக்ஸாண்டர் பெரும்படையுடன் அம்பி தனது ஒற்றர்கள் மூலம் செய்தி அனுப்பி தமது ஆதரவை அறிவித்து இருந்தார். கிரேக்கத்தில் இருந்து இவ்வளவு தூரம் படை நடத்தி வர முடிந்ததென்றால், பல வெற்றிகளைக் குவித்த பின்பே இங்கு வந்திருக்கிறார் என்று புரிந்துக் கொண்டார்.அப்படிப்பட்டவரை எதிர்த்தால் அழிவு நிச்சயம். நாம் ஏன் இவரைக் கொண்டு, போரஸின் மீது நமக்குள்ள பகையை தீர்த்துக் கொள்ளக் கூடாது? என்று திட்டமிட்டார் அம்பி . தனது எல்லை நாட்டில் காலடி வைத்த அலெக்ஸாண்டரை அவர் இரு கை நீட்டி வரவேற்றார். அவருக்கு மாலை அணிவித்து, மதிப்புமிக்க பரிசுகளைக் காணிக்கையாக்கினார்.

அலெக்ஸாண்டரும் பதிலுக்கு சில பரிசுகளை அம்பிக்கு வழங்கி, அவருடைய நட்பை ஏற்றார்.அலெக்ஸாண்டர் அம்பியின் அரண்மனையிலேயே தங்கிக் கொண்டார். அம்பி தன் அக்கம் பக்கத்தில் உள்ள சிற்றரசர்கள் சிலரையும் கூட்டி வந்து அலெக்ஸாண்டரிடம் சரண் அடையச் செய்தார்.அலெக்ஸாண்டர் அம்பி இடையேயான நட்பு அன்பால் விளைந்ததல்ல. ஆதாயம் கருதிய கூட்டு அது. அம்பி மூலம் நாட்டு நிலவரத்தை அறிந்து கொள்ள முடிகிறது என்று நினைத்துக் கொண்டார் அலெக்ஸாண்டர்.அலெக்ஸாண்டர் மூலம் போரஸ்ஸை அழிக்கலாம். முடிந்தால் போரஸின் நிலப்பகுதியையும் அலெக்ஸாண்டரிடம் இருந்து பரிசாகப் பெற்றுவிடலாம், என்பது அம்பியின் எண்ணம்.

காட்டிக் கொடுத்த அம்பி இந்திய வரலாற்றில் ஒரு களங்கம். அந்நியனுக்கு இடமில்லை, என்று வீறு கொண்டு எழுந்த புருசொத்தமர் தமிழரின் மனம் காத்த மறவர் தமிழர் வரலாற்றின் பெருமிதம்.அன்று தமிழன் ஆண்ட நிலப்பகுதி தற்போது பாகிஸ்தானில் உள்ள பஞ்சாப் மாநிலம் வரை அகண்டு இருந்தது ஆகும். புருசொத்தமர் வீரம் மிக்கவர். அவரிடம் வடக்கே ஐயாயிரம் பேர் கொண்ட குதிரை படையும், போர்பயிற்சி பெற்ற 3000 யானைகளும் இருந்தன. அலெக்ஸாண்டரிடம் யானைப் படை இல்லை. அம்பி தன்னுடைய யானைப்படையை அலெக்ஸாண்டருக்குக் கொடுத்து உதவத் தயாராயிருந்தார். அத்துடன் புருசொத்தமர் படைபலம் பற்றிய அத்தனை விவரங்களையும் அலெக்ஸாண்டரிடம் தெரிவித்துவிட்டார்.

அலெக்ஸாண்டர் தன்னுடைய தூதனை புருசொத்தமரிடம் சென்று சமாதானத்தை விரும்பினால் தன்னை மரியாதையுடன் வரவேற்க வேண்டும்!’ என்று தூதன் மூலம் தெரிவித்தார்.புருசொத்தமர், “அந்நியருக்குத் தலை வணங்கும் அவசியம் தனக்கில்லை. தான் போருக்குத் தயார்!’ என்று தெரிவித்து விட்டார்.அம்பியின் மூலம் படகுகளை ஏற்பாடு செய்து கொண்டு, சிந்து நதியைக் கடந்தார் அலெக்ஸாண்டர். சிந்து நதிக்கரையில் தனது படைகளுடன் முகாமிட்டார்.போருக்கு முன் வேடிக்கை, விளையாட்டு, விருந்து என்று ஓய்வெடுத்து அவருடைய படை ஏறத்தாழ ஒரு மாதகால ஓய்வை அனுபவித்தனர். அந்த அவகாசத்தில் போரஸ் தன்னுடைய படையைத் திரட்டினார். அவருடைய தோழமை நாடுகளில் இருந்தும் படைகள் வந்து இணைந்தன.



போரஸ் மன்னன் போருக்கு அறை கூவல் விடுவித்த செய்தியை தூதன் மூலம் அறிந்தார் அலெக்ஸாண்டர்.ஜீலம் நிதியைக் கடந்து தான், எதிரியைத் தாக்க முடியும். மறுகரையில் போரஸின் படை, தாக்கும் முனைப்புடன் நின்று கொண்டிருந்தது.அலெக்ஸ்சன்டரின் தந்திரங்களை புருசொத்தமர் அறிந்து இருந்தார் . அவர்களது தாக்குதல் முறைகள் பற்றி ஏற்க்கனவே போர்காலங்களில் இருந்து தப்பிவந்த மன்னர் பலரும் புருசொத்தமரிடம் தஞ்சம் அடைந்து இருந்தார்கள் . புருசொத்தமர் மிக தந்திரமாக தனது படை பிரிவு ஒன்றை அம்பியின் நாட்டு எல்லைக்குள் அனுப்பி அங்கிருந்த நாட்டு விசுவாசிகளை திரட்டி வைத்து இருந்தார் சரியான் நேரத்தில் அவர்கள் அம்பியின் அரண் மனை மீது தகுத்த நடத்தி அம்பியை சிறைபிடிக்க தயாராக இருந்தார்கள் .

அலெக்ஸ்சாண்டர் இரவு ஒருநாள் தனது படைகளை ஆற்றை இரகசியமாக கடந்து சென்று புருசோத்தமன் படைகளுக்கு பின்வலம்மாக நிலை எடுக்க பணித்தான் . ஆற்றை கடப்பது அவ்வளவு இலகுவான விடயம் இல்லை புருசோத்தமன் எப்போதும் தனது எல்லைகளை மிக அவதானமாக காத்து வந்தார் . அங்காங்கே சில் குடியிருப்புகள் இருந்தன அவற்றை கடந்து படைகளை உள் நுழைவது கடினம் . ஆற்றை கடக்க இலகுவான் இடமாக் ஆற்றின் நடுவே இரண்டு தீவுகள் உள்ள பகுதி தேர்வானது. முதல் நாள் இரவின் இருட்டில் முதல் தீவை கடப்பது மறுநாள் இரவு இருட்டில் சோழர் எல்லைக்குள் நுழைவது . மிகவும் அவதானமாக இருக்க வேண்டும் என்பதற்காக வேறு ஒரு இடத்தில் நகர்வுக்கான ஆயதங்கள் செய்வது போல் பாசாங்கு காட்டப்பட்டது ஆனாலும் சோழர்கள் படைகளை தயாராக வைத்து இருந்தார்கள் . எல்லைக்குள் ஊடுருவிய படைகள் சோழரின் ஒற்றர்கள் கண்களில் தப்பவில்லை .

யுத்தம் தொடங்கியது குதிர படைகள் காடுகளை மிக வேகமாக் ஊடறுத்து அம்புகளை சென்றன காடுகளை உடைத்தபடி யானைகள் பிளிறி கொண்டு நலாபுறமும் இருந்து வந்தன அலெக்ஸாண்டர் செய்வது அறியாது சிதறி ஓட அம்பியின் அரண்மனியும் சோழர் வசம் ஆனது . 3000 யானைகளின் சீற்றத்துள் அலெக்ஸாண்டரின் குதிரைபடைகள் பதிக்கு மேல் அழிந்தன . மாநிதி சோழன் படைதலபது எறிந்த வேல் அலெக்ஸ்சன்டரின் பாதி உயிரை குடித்தது விசம் தடவிய வேல் பட்து அலெக்ஸ்சாண்டர் வீழ்ந்தான் ….

அலெக்ஸாண்டரின் நாடு பிடிக்கும் ஆசை அத்தோடு முடிவுக்கு வருகின்றது . போர் நிருத்தபடுகின்றது . அலெக்ஸ்சன்டரின் தெற்கு நோக்கிய படைபிரிவின் தலைவன் அலெக்ஸ்சன்டரின் நண்பன் ஹெபாஸ்டியன் கொல்படுகின்றான் அவனது வாளை புருசோத்தமன் அலேச்சண்டரிடம் ஒப்படைத்து மரியாதை செலுத்துகின்றான் . விஷம் அழமாக அலேச்சண்டரின் உடலில் பாய்ந்து இருந்தது. அவன் மிகவும் துன்பப்டுகின்றான்…. நாடு அவனது பிடிக்கும் ஆசை அத்தோடு முடிவுக்கு வருகின்றது…ஒடுக்கியவன் தமிழன் மா மன்னன் சோழ சக்ரவர்த்தி புருசோத்தம்ர் …அலெக்ஸ்சாண்டர் மீளமுடியாத விளுபுண் உவதையில் வீரசொர்க்கம் அடைகின்றான் ……..


நன்றி: நயினாதீவு இணையம்.

Thursday 21 April 2016

ஹிட்லரின் ரகசியமான ப்ளையிங் சாசர்..

ஹிட்லரின் படைகள் ஸ்டாலின்கிராட் மற்றும் வட ஆப்பிரிக்கா போன்ற வெகு தொலைவில் உள்ள பிரதேச போர் முனைகளில் எதிரிகளை நொறுக்கித்தள்ளி கொண்டிருக்கும் அதே சமயம், மென்மேலும் போர் களங்களை வெற்றிகரமாய் கைப்பற்ற உதவும் 'வார்-வின்னிங் சூப்பர் வெப்பன்'களை (war-winning super-weapon) அதிகம் உருவாக்க உத்தரவிட்டார் ஹிட்லர்..!  வி2 ராக்கெட்டுகள் மற்றும் முதல் தலைமுறை ஜெட் போர் விமானங்கள் போன்ற அதிநவீன ஆயுதங்களில் ஹிட்லரின் மிகவும் ரகசிய ஆயுதமான ப்ளையிங் சாசர் மிகவும் மர்மமான ஒரு விடயமாகவே இன்றுவரை நீடிக்கிறது.

 ப்ளையிங் சாசர் - நிஜமாகவே உருவாக்கம் பெற்றதா அல்லது ஒரு கட்டுக்கதையா என்ற குழப்பத்திற்கு  பதில் ...லண்டன் மற்றும் நியூயார்க் ஆகிய நகரங்களில் குண்டு வீசுவதற்காக, ஜெர்மனியானது பறக்கும் சாசரை வடிவமைக்க திட்டமிட்டது. அப்படியாக, மணி-வடிவ பறக்கும் பொருளாக, அதாவது ஏலியன்களின் பறக்கும் தட்டு போலிருக்கும் வடிவமைப்பில் ப்ளையிங் சாசர் ஆனது நாஜிக்களால் உருவாக்கப்பட்டதாக நம்பப்படுகிறது.முன்னாள் போலாந்து பத்திரிகையாளர் ஒருவர் ஜெர்மானியர்கள் யூஎப்ஒ எனப்படும் பறக்கும் தட்டு ஒன்றை உருவாக்குகின்றனர் என்று கூறி கோட்பாடு உருவாக்கியுள்ளார்.இதுதான் ஜெர்மன் யுஎஃப்ஒ-வின் முன்மாதிரி (Prototype of a German UFO) அதனை தொடர்ந்து ஹிட்லரின் நாஸி விஞ்ஞானிகள் மூலம் ப்ளையிங் சாசர் விமான வகையானது உண்மையில் வடிவமைக்கப்பட்டுள்ளது என்றும் நம்பப்படுகிறது மிகவும் அதிநவீன ஆயுதமான இது பறக்கவிடப்பட்டு இருக்கலாம் என்றும் இந்த ப்ளையிங் சாசர் ரகசிய திட்டமானது நிகழ்ந்துள்ளது என்பதை நிரூபிக்கும் பல ஆதாரங்களும் இருக்கின்றன.

அந்த ஆதாரங்களில் குறிப்பாக, 1944-ல் தேம்ஸ் மீது மிகவும் குறைவான உயரத்தில் ஜெர்மன் இராணுவத்தின் இரும்பு கிராஸ் குறியீடு கொண்ட ஒரு பறக்கும் தட்டை பார்த்ததாய் சாட்சிகள் உள்ளன. அது மட்டுமின்றி அப்போது வெளியான நியூயார்க் டைம்ஸ் நாளிதழில் 'மர்மமான பறக்கும் தட்டு' சார்ந்த செய்தி கட்டுரை ஒன்றும் வெளியாகியுள்ளது. அக்கட்டுரையுடன் சேர்த்து நகரத்தின் மிக உயரமான கட்டங்களுக்கு மேல மிகவும் வேகமாக (high speed) பறக்கும் மர்மமான கருவியின் புகைப்படமும் வெளியானது. மேலும் "ஜெர்மானிய பறக்கும் தட்டு ஆயுதமாக ப்ளையிங் சாசர் என்பது நிச்சயமாக இருக்கிறது என்று அமெரிக்கர்கள் அதிகம் நம்புகிறார்கள்" என்றும்  அக்கட்டுரை குறிப்பிடுகின்றது உடன், ப்ளையிங் சாசர் உருவாக்கம் பற்றிய பெரும்பாலான தரவுகளை (Paper works) ஜெர்மானியர்கள் அழித்துவிட்டனர் என்றும் அக்கட்டுரை தெரிவித்துள்ளது. இருப்பினும் கூட 1960-களில் கனடா நாட்டின் பறக்கும் தட்டு ஆய்வாளர்கள் ஜெர்மனியின் ப்ளையிங் சாசர் போன்றே ஒரு பறக்கும் ஆயுதத்தை உருவாக்கியுள்ளனர். ஆனால் அது பறந்ததா என்பது பற்றிய ஆதரங்கள் இல்லை. ஜெர்மனியின் பறக்கும் சாசர் திட்டத்தில் ருடோல்ப் ஸ்க்ரீவர் (Rudolf Schriever) என்பவர் எஞ்சினீயர் மற்றும் டெஸ்ட் பைலட்டாகவும்,ஓட்டோ ஹபர்மோல் (Otto Habermohl) என்பவர் மற்றொரு எஞ்சினீயராகவும் பணியாற்றியுள்ளனர். அதனாலேயே பறக்கும் சாசர் திட்டமானது ஸ்க்ரீவர் - ஹபர்மோல் (Schriever-Habermohl scheme) என்ற பெயரின் கீழ் நடந்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. 

1941 - 1943 ஆகிய இடைப்பட்ட காலகட்டத்தில் நடத்தப்பட்ட இந்த ப்ராஜக்ட் ஆனது ப்ராக்கை (Prague) மையமாக கொண்டு இயங்கியது தெரியவந்துள்ளது.  சுமார் ஆறு கெஜம் அளவில் உள்ள வெள்ளி நிற பறக்கும் சாசரை பல்வேறு காலகட்டங்களில் பலமுறை பார்த்துள்ளதாக நேச நாட்டு கைதிகள் சாட்சியம் தெரிவித்துள்ளதும் ப்ளையிங் சாசருக்கான பெரிய ஆதாரம் ஆகும். ப்ளையிங் சாசர் வடிவமைப்பு ப்ராஜக்டில் சுமார் 15 முன்மாதிரிகள் உருவாக்கப்பட்டன என்கிறார்  இத்திட்டத்தின் கீழ் பணியாற்றிய மற்றொரு எஞ்சினீயர் ஆன ஜோசப் ஆன்ட்ரியாஸ் எப்.உண்மையில் ப்ளையிங் சாசர் என்று ஒன்று கிடையவே கிடையாது பிஎம்எக்ஸ்எம்7இ மெஸ்ஸர்ஸ்ஷிமிட் 262 ஜெர்மன் லஃப்ட்வேஃப் விமானம் தான் (BMXM7E Messerschmitt 262 German Luftwaffe plane) என்றும் கூறப்பட்டது . போருக்கு பின்பு பல ஜெர்மானிய விஞ்ஞானிகள் அமெரிக்க விண்வெளி ஆராய்ச்சி திட்டங்களுக்கு உதவி புரிந்தனர் என்பதும், ப்ளையிங் சாசர் உருவாக்கம் என்ற கோட்பாட்டை உருவாக்கியது முன்னாள் போலாந்து பத்திரிகையாளரான இகோர் விட்கவ்ஸ்கி (Igor Witkowski) என்பதும் குறிப்பிடத்தக்கது.

நன்றி - #tamilgizbot