Thursday 10 September 2015

தி மிராக்கிள் பைன்..!

தி மிராக்கிள் பைன்..!

ஜப்பானில் சுனாமியில் சிக்கிய 70,000 ஆயிரம் மரங்களில் தப்பிய ஒரே ஒரு மரம்(தி மிராக்கிள் பைன்). அதிசய மரத்திற்கு அழிவே இல்லாத நினைவிடம்
2011ம் ஆண்டு மார்ச் 11ம் நாள் ஜப்பானில் சுனாமி ஏற்பட்டபோது 19,000 பேர் இறந்தும் காணாமலும் போயினர், 3 இலட்சம் பேர் வீடுகளை இழந்தனர், அப்போது 70,000 மரங்களும் அழிந்து போயின, ஆனால் 88 அடி உயரம் உள்ள ஒரே ஒரு பைன் மரம் மட்டும் அழியாமல் நின்றது, இந்த மரம் ஆறு மாதங்களுக்கு முன் தான் இறந்து போனது.
இந்த மரத்தை மீண்டும் செயற்கையாக உருவாக்கியுள்ளார்கள், இந்த மரம் சுனாமியில் இறந்து போன 19,000 பேருக்கான நினைவிடமாக இருக்கும். இதே மரம் ஏற்கனவே 1896 மற்றும் 1933களில் நடந்த சுனாமி விபத்திலும் தப்பி பிழைத்தது. இந்த மரம் 173 வருடங்கள் உயிருடன் இருந்தது