Tuesday, 1 March 2016

உலகில் பழமையான மாநகரம்

உலகில் ஆறாயிரம் ஆண்டுகளாக தொடர்ந்து இயங்கி வரும் ஒரே ஒரு மாநகரம் எது என்று உங்களுக்குத் தெரியுமா?
"The World's only living civilization"
உலகில் பழமையான மாநகரங்கள் பல இருந்தாலு
ம் அவை எல்லாம் ஒரு காலத்தில் அழிந்தோ சிதைவுற்றோ மீண்டும் தோன்றியிருக்கின்றன.
மிகப் பழமையான கிரேக்க,ஏத்தன்ஸ், ரோம் போன்ற மாநகரங்களை ஆய்விடும் போது அடுக்கடுகான அமைவிடங்கள் இருப்பது தெரியவந்தது.
அதாவது அந்த நகரம் புதையுண்டு அதன் மேல் மீண்டும் ஒரு நகரம் உருவாக்கப்பட்டது.
ஆனால் சுமார்6000 ஆண்டுகளாக தொடர்ந்து இயங்கி வரும் ஒரே நகரம் "மதுரை "தான்.
நகரம் மட்டும் இயங்கவில்லை தனது கலாச்சாரத்தை இன்று வரை தொடர்ச்சியாக எடுத்து வந்துள்ள காரணத்தினால்
 மதுரையை "The World's only living civilization" என்று டிஸ்கவரி தொலைக்காட்சியின் "The Story of India" ஆவணப்படத் தொகுப்பாளர் மைக்கெல் வுட்ஸ்.
மேலும் மதுரையை ஒட்டி அமைந்துள்ள பெருமாள் மலையின் அருகில் நரசிங்கம்பட்டி கிராமத்தில் சமீபத்திய தொல்லியல் துறை ஆய்வில்
 சுமார் 6000 ஆண்டுகளுக்கு முந்தைய ஈமக்காடு (இறந்தவர்களை புதைக்கும் இடம்) கண்டுபிடிக்கப்பட்டது.
 இதில் வியக்கத்தக்க விடயம் என்னவென்றால் இறந்தோரைப் புதைத்த இடத்தினை அடையாளம் கொள்ள
 புதைத்த இடத்தின் மீது அடையாளமாய் கற்களை அடுக்கி வைக்கும் பழக்கம் இருந்துள்ளது. மேலும் இது
 இறந்தோரை தாழியில் அடைக்கும் நாகரீகத்திற்கும் முந்தையது. இந்த இடத்தை இப்போது நீங்கள் சென்று பார்த்தாலும் கற்குவியலைக் காணலாம்.
அங்கு வந்து குறிப்பிட்ட நாட்களில் வந்து பூஜித்து வழிபடும் வழக்கத்தையும் சிலர் கொண்டுள்ளனர்.
அவர்களை விசாரித்த போது பரம்பரை,பரம்பரையாக பாரம்பரியமாக வழிபடுவதாகவும் இதற்கான காரணம் தெரியாது அங்கு முன்னோர்கள் இருப்பதாக நம்பிக்கை உள்ளதாகவும் தெரிவிக்கின்றனர்.
அது அவர்களது முன்னோர்கள் புதையுண்ட இடம் என்று தொல்லியல் ஆய்வாளர்கள் சொன்னதைக் கேட்டு
 பிரம்மித்தனர். ஆம் நண்பர்களே சுமார் 6000வருடமாக தொடர்ந்து ஒரு நகரம் இயக்கம் கொண்டு வருவது மட்டுமல்ல,
 ஒரு கலாச்சாரமும் தொடர்ந்து இடைவெளியில்லாமல் இயங்கி வருகிறது என்றால் பிரம்மிப்பாக உள்ளதல்லவா?
அது மட்டுமல்ல மதுரைக்கு "தூங்கா நகரம்" என்ற பெயரும் இரண்டு,மூன்று ஆண்டுகளுக்கு முன் இட்ட பெயர்
 அல்ல. ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்னரே இங்கு இரவு நேரக் கடைகள் பிரசித்தம். அவற்றை அல் அங்காடி என்று
 கூறுவதுண்டு. இதன் காரணமாகவே இன்று வரை இது தூங்கா நகரம் என்று அழைக்கப்படுகிறது.
ஆறாயிரம் ஆண்டுகளாக உலகிலேயே ஒரு நாகரீகத்தின் கலையையும், கலாச்சாரத்தையும்,மொழியையும் சுமந்து
 இயங்கி வரும் நகரம் மதுரை மட்டும் தான் என்று ஆய்வாளர்கள் பிரம்மிக்கிறார்கள்.

Related Posts:

  • ஹிட்லரின் ரகசியமான ப்ளையிங் சாசர்.. ஹிட்லரின் படைகள் ஸ்டாலின்கிராட் மற்றும் வட ஆப்பிரிக்கா போன்ற வெகு தொலைவில் உள்ள பிரதேச போர் முனைகளில் எதிரிகளை நொறுக்கித்தள்ளி கொண்டிருக்கும் அதே சமயம், மென்மேலும் போர் களங்களை வெற்றிகரமாய் கைப்பற்ற உதவும் 'வார்-வின்னிங் ச… Read More
  • தஞ்சை கோயில் ரகசியம்: வல்லுநர்கள் புதிய தகவல் உலகின் பாரம்பரியச் சின்னமும் இந்தியாவின் பெருமையுமான தஞ்சைப் பெரிய கோயில் முழுக்க முழுக்க மணல் மீது கட்டப்பட்டுள்ளது என்கின்றன சமீபத்திய ஆய்வுகள். 2010-ம் ஆண்டு நடந்த பெரிய கோயிலின் ஆயிரமாவது ஆண்டு விழாவின்போது கருவறையில் … Read More
  • ‎ILLUMINATI‬- "the unknown of known" இல்லுமினாட்டி - ‪#‎ILLUMINATI‬ (உலகை ஆழும் நிழல் உலக ராஜாக்கள் ) (விரிவான விளக்கம் ) உண்மை சில நேரங்களில் கசக்கும் அனால் அதை ஏற்று கொள்ளவேண்டிய நிலையில் தான் இன்று உள்ளோம் .. இன்று நமது நாட்டையோ அல்லது… Read More
  • சுஜாதா ரங்கராஜன் - ’மை தீராதா ஓர் தூரிகை’.... நீங்கள் ரங்கராஜன் இல்லை... எழுத்து உலகத்துகே ரங்க"ராஜ்ஜியம்" சில வருடங்களுக்கு முன்...எதை படிப்பது, எவரைப் படிப்பது என்று எந்த புரிதலும் இல்லாமல் சகட்டு மேனிக்கு அனைவரையும் படித்து கொண்டிருந்த காலம்....சுஜாதாவை செவி … Read More
  • அலெக்ஸாண்டரை கலங்க வைத்த மன்னன் புருசோத்தமர்!!! கிமு 320ம் ஆண்டு அலெக்ஸாண்டரின் நாடு பிடிக்கும் ஆசை ஓங்கியெரியும் தீயாகக் கொழுந்துவிட்டு எரிந்தது. அவருடைய தந்தை பிலிப் காலமுதல் பல் நாடுகள் மீதான படை எடுப்புகள் அந்த நாடுகளை ஆக்கிரமித்து அழகிய பெண்கள், அந்நாடுகளின் … Read More